Tuesday, June 5, 2012

காமசூத்ரா, நியாயசூத்ரா மற்றும் வாத்ஸ்யாயனா




தலைப்பில் உள்ள முதல் வார்த்தை பற்றி விளக்குவதற்கான தேவை இப்போது இல்லை, அது எல்லோருக்கும் பரிச்சயமானதே.

மற்ற இரண்டு வார்த்தைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன் இந்தப் பதிவை எழுதத் தூண்டிய கே.பாலச்சந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ மௌலிக்கு என் நன்றிகள்.


’காமசூத்ரா’ என்று சொன்னவுடன் பொதுவாக அனைவருக்கும் ஒரு புன்முறுவல் வருவதுண்டு. சிலருக்கு அந்த வார்த்தையை பொதுவில் சொன்னால் சிறு சங்கடம் வருவதைக் கூடப் பார்த்திருக்கிறேன்.. வாழ்நாளில் ஒரு முறையேனும் அதை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவல் கூட சிலருக்குத் தோன்றலாம். (அந்த ஒரு சிலரில் அடியேனும் ஒருவன்.!)


திருக்குறள் எழுதியது திருவள்ளுவர், சிலப்பதிகாரம் இயற்றியது இளங்கோவடிகள் என்று தெரிந்து வைத்திருக்கும் நாம் என்றாவது ‘காமசூத்ரா’ எழுதியது யார் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா என்பது சந்தேகமே. இதற்கு முன் ‘காமசூத்ரா’ என்பது ஒரு குழுவாக சிலர் இயற்றியது என்றே நினைத்துவந்தேன்.


ஒருநாள் அலுவலகத்தில் பொழுது போகாமல் ‘you tube'-ல் கே.பாலச்சந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ பார்க்க வேண்டிய நிர்பந்தம். ;) அந்தப் படத்தில் ‘மன்மதன் நாயுடு’ என்ற கதாபாத்திரத்தில் ‘மௌலி’நடித்திருப்பார். மௌலியின் கதாபாத்திரம் பெண்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். மௌலி அடிக்கடி ‘வாத்ஸ்யாயனா’ ‘வாத்ஸ்யாயனா’ என்று சொல்லிக் கொள்வார்.

ஒரு காட்சியில் கமல் மௌலியிடம் கேட்பார்: “அதென்ன வார்த்தைக்கு வார்த்தை வாத்ஸ்யாயனா, வாத்ஸ்யாயனா-ன்னு சொல்றீங்க.??”
மௌலி: “ஒவ்வொருத்தருக்கும் விநாயகர், வெங்கடாசலபதி, முருகன் மாதிரி எனக்கு வாத்ஸ்யாயனா Favorite God...காமசூத்ரா எழுதினவர்” என்பார்.

அப்போது தான் உரைத்தது “If there is a creation, there should be a creator" ;) :P



உடனே நண்பர் Wikipedia-வைத் தொடர்பு கொண்டு ‘வாத்ஸ்யாயனா” பற்றி ஆராய்ந்த போது தெரியவந்தது அவர் 'கௌதம ரிஷி’-யின் ‘நியாயசூத்ரா’-வை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்று.


‘நியாய சூத்ரா’-வின் தொடக்கத்திலேயே அதன் முக்கிய நோக்கம் என்பது ப்ரமண,ப்ரமேய,ப்ரயோஜன,சித்தாந்த,தர்க்க போன்ற பதினாறு பிரிவுகளில் சுதந்திர அறிவு பெறுவது தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (source: wikipedia: In the opening sūtra of the Nyāya Sūtra, it was claimed that the ultimate purpose of it is the attainment of liberation (niḥśreyasa), attained by knowledge of the sixteen categories (padārtha)[4)
மேலும் ‘நியாய சூத்ரா’ தர்க்க-வித்யா (Science of Debate) மற்றும் வாத-வித்யா (Science of Discussion) என்றும் அழைக்கப்படுகிறது.


வாத்ஸ்யாயனா கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கும் - கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறார். சில ஆய்வுகள் அவர் கி.மு.150-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகவும் தெரிவிக்கின்றன. வாத்ஸ்யாயனாவின் காலம் குறித்த சரியான தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை..



அது சரி.. ‘காமசூத்ரா’ famous ஆகி விட்டது. ஆனால் ‘வாத்ஸ்யாயனா’ மட்டும் ஏன் famous ஆகவில்லை என்று தோன்றியது.  நியாயமான கேள்வி தானே..??!!!


”வாத்ஸ்யாயனா, வாத்ஸ்யாயனா..!!!!”  :)

No comments:

Post a Comment