எப்போதும் புகைந்து கொண்டிருக்கிறது
ஆழ் மனதில் ஒரு வன்மம்...
கோபமோ, வெறுப்போ, ஆசையோ,
காமமோ, காழ்ப்புணர்ச்சியோ
இப்படி எதுவாகவும் இருக்கலாம் அவ்வன்மம்...
அது எப்போதும் தனக்கான ஒரு சந்தர்ப்பத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது, தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள...
எச்சரிக்கையாய் இருங்கள்..!!
உங்களுக்குள்ளும் இருக்கக்கூடும்
ஒரு வன்மம், நீங்கள் அறியாமலேயே...!!
Saturday, July 31, 2010
Wednesday, July 28, 2010
உண்மையாய் நம்பப்படும்
என சொல்லும் பொய்களும்
பொய்யாக இருக்கக்கூடும் என
நம்பப்படும் உண்மைகளும்
நிறைந்ததாய் இருக்கிறது நம் வாழ்க்கை...
நாள் முடிவில் ஏதோ ஒரு நொடியில்
'சொன்னது எதுவாகவும் இருக்கட்டும்’
என மனதை மாற்றிக் கொண்டு உறங்கிப்போகிறோம்.
மறுதினம் வானம் விடியல் கொள்கிறது, நாம் எதிர்கொள்ள
வேண்டிய உண்மைகளையும் பொய்களையும்
இரவு முழுவதும் உதிர்த்து விட்டபடி....
என சொல்லும் பொய்களும்
பொய்யாக இருக்கக்கூடும் என
நம்பப்படும் உண்மைகளும்
நிறைந்ததாய் இருக்கிறது நம் வாழ்க்கை...
நாள் முடிவில் ஏதோ ஒரு நொடியில்
'சொன்னது எதுவாகவும் இருக்கட்டும்’
என மனதை மாற்றிக் கொண்டு உறங்கிப்போகிறோம்.
மறுதினம் வானம் விடியல் கொள்கிறது, நாம் எதிர்கொள்ள
வேண்டிய உண்மைகளையும் பொய்களையும்
இரவு முழுவதும் உதிர்த்து விட்டபடி....
Subscribe to:
Posts (Atom)
